கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள்
வெளியிடப்பட்ட நேரம்: 18-Jul-2019 , 06:27 PM
கடைசி தொடர்பு: 18-Jul-2019 , 06:36 PM
Share
சட்டப்பேரவையின் நம்பிக்கையை பெற்றவராக முதல்வர் இருக்க வேண்டும், இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கடந்த இரு வாரங்களில் 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிருப்தி எம்எல்ஏக் கள் பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட 15 பேர், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்கள் ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமாருக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்தனர்.