செய்திகள்

தமிழகத்தில் பாய்ந்தது முதல் வழக்கு

மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சென்னையில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது. இப்புகாரை பதிவு செய்த போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டமான பி.என்.எஸ்.எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா-2023 சட்டத்தின் கீ்ழ் வழக்குப்பதிவு செய்தனர்.